Saturday, February 2, 2013
புவி வெப்பமடைதலும் கடல் வளத் தாக்கமும் - முனைவர் எஸ்.தினகரன்
Saturday, November 3, 2012
மாற்றானில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரமான அகிலன் -விமலனுக்கு பத்து அப்பா என்று அவரது அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கட்கர் சொல்கிறார் இது சாத்தியமா?
மாற்றானில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரமான அகிலன் -விமலனுக்கு பத்து அப்பா என்று அவரது அப்பாவாக நடித்திருக்கும் சச்சின் கட்கர் சொல்கிறார் இது சாத்தியமா?
மனிதர்களை க்ளோனிங் முறையில் உருவாக்குவதற்கு தடை இருக்கிறது. ரகசியமாக செய்ய முடியாது. மரபணு மாற்றங்களின் மூலம் பத்து பேருடைய ஜீனியங்களை கொண்டுவருவது நடை முறை சாத்தியமில்லை. சமீபத்தில் தனது ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற யமனக்காவும், கர்டனும் கூட நாலே நாலு ஜீன்களை மட்டுமே இடைச்செருகி அனைத்து செல்களையும் உருவாக்கும் திறன் படைத்த ஸ்டெம் செல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது அதன் கருவிலுள்ள செல்களை எடுத்து பாதுகாத்து ஏதேனும் உறுப்புகள் சேதம் ஏற்படும் போது அதை உருவாக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. ரத்தத்திலிருந்து (சிவப்பணுக்கள் நீங்கலாக) எடுக்கப்படும் செல்களிலிருந்து எந்த விதமான சேதமடைந்த உறுப்புகளையும் (மூளை, இதயம், அல்சீமர் குறைபாடுகள், இன்னும் பல..) சீர் செய்துவிட முடியும். இதற்கே இவ்வளவு காலமாகிவிட்டது. சரி படம் தானே என்று விட்டுவிடவும் முடியவில்லை என்னவோ அனைத்து தொழில்நுட்பமும் அழிவிற்குத்தான் என்ற முறையில் படமாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. அரைகுறையாக அறிவியலை, அதன் தொழில்நுட்பத்தை, மக்களிடம்
கொண்டு செல்லும் பொது கவனம் தேவை. பொத்தாம் பொதுவாக உலகம் 2012 ல் அழியபோகிறது என்று சொன்னால்கூட நம்பும் கூட்டம் நம்மிடையே நிறைய உண்டு.
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களில் ஒரே சூழலில் வாழும்போது வெவ்வேறு குணாதிசயம் சாத்தியமா?
சத்தியமாக இல்லை. கிட்டத்தட்ட 99 சதவீதம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அவருக்கு கோபம் வந்தால் இவர் அடிப்பார் போன்ற மூட நம்பிக்கைகள் தவிர்த்து...
ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் சண்டையெல்லாம் போட முடியுமா?
சாத்தியமே இல்லை ஒரு இதயம் இருக்கும்பட்சத்தில் நெஞ்செலும்பு கூட ஒட்டியே இருக்கும். சர்வசாதரணமாக நடனமோ, சண்டையோ போட முடியாது.
மாற்றானில், சிபோபகுஸ் என்ற இரட்டைப்பிறவி வகையை வைத்து வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வகை குழந்தைகளுக்கு மார்பெலும்பும், வயிற்றுப் பகுதியும் ஒட்டியிருக்கும்.
டெஸ்ட் ட்யூப் குழந்தைகளில் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் சாத்தியமா?
சாத்தியமேயில்லை.
பாலில் கலந்திருக்கும் ஸ்டீராய்டுகளை கண்டறிய முடியாதா?
அதெல்லாம் சும்மா?
L C/MS/MS மூலம் கண்டுபிடிக்கலாம்
ராணுவ ஆராய்ச்சிக் கூடத்திற்கு நினைத்த மாத்திரம் போய்விட முடியாது அமைச்சரே ஆனாலும் கூட.
உக்கரைன் நாட்டுல கால்பந்து தான் பிரதான விளையாட்டு
94 ல தான் ஒலிம்பிகிலேயே கலந்து கொண்டார்கள்.
பதக்கப் பட்டியலில் ஒலிம்பிக்கில் 35 வது இடம்
ஏன் இந்த கொலைவெறி? அந்த நாடு மேல..
இன்னும் ஏராளமான கேள்விகள் உண்டு
Tuesday, October 23, 2012
Sunday, October 21, 2012
மின்வெட்டும் டெங்கி காய்ச்சலும்
Tuesday, May 15, 2012
யானைகள் - மனிதர்கள் ஒத்திசைந்து வாழ்தல் குறித்த ஒரு பார்வை - Dr. S. தினகரன்
வலசை செல்லும் பாதைகளில் உள்ள விவசாய நிலங்களும், எஸ்டேட்டுகளும் தான் யானைகளால் பரவலாக பாதிக்கப்படுகின்றன. யானைகளும் மனிதர்களும் ஒத்திசைந்து ஒரே இடத்தில் வாழும் சாத்தியக்கூறுகளை உருவாக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பினும் பயத்தோடும், ஒருவித மரியாதையோடும் தான் அங்கு வாழும் மக்கள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளைபோல் அல்லாமல் நமது நிலப்பரப்பு குறைவு ஆனால் இருப்பிட வசதி என்பது வனவிலங்குகளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி போதுமானதாய் இல்லை.
வன விலங்குகளுக்கு அதற்கான வாழும் சூழலைத்தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு நாட்டில் 33 சதவீதத்திற்கும் குறைவாக காடுகள் இருக்கும்பட்சத்தில், அந்த நாட்டை வளமான நாடாக கருத முடியாது. இந்தியாவில் சுமார் 19.4 சதவீதம் தான் காடுகள் உள்ளன.
அதேவேளையில், இருக்கும் வனவிலங்குகளை எவ்வாறு பாது காப்பது? அதற்கான வாழும் சூழலை எப்படி உருவாக்குவது? மனித-வனவிலங்குகளுக்கிடையேயான முரண்களை களைவது எப்படி? என்று நம்முன் ஏராளமான கேள்விகள் நிற்கின்றன.
உதாரணமாக, யானைகளால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும், மனிதர்களால் யானைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும் உற்று கவனிக்கப்பட வேண்டியவை. இவர்களுக்கிடையேயான முரண்களை களையும் அவசியமும் இருக்கிறது. ஏனென்றால், யானை, வனச்சூழலில் ஒரு முக்கியமான விலங்கு. வன ஆரோக்கியத்தின் கண்ணாடி. உணவுச்சங்கிலியின் ஒரு முக்கியச்சரடு. யானைகளின் இழப்பு, யானைகளை மட்டும் பாதிப்பதில்லை அந்த வனத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
இது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை சார்பாக மே மாதம் இரண்டாம் வாரத்தில் யானைகள் அதிகம் வலசை செல்லும் பகுததிகளில் உள்ள முக்கியமான மலைக்கிராமங்களான மணலாறு, மேலமணலாறு ஆரம்பித்து கூடலூர் வரையிலான தொழு, எள்ளுக்கட்டுப்பாறை, மூணாண்டிபட்டி, வெட்டுப்பட்டி போன்ற கிராமங்கள் வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நோக்கம், யானைகளை அப்பகுதி மக்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? தப்பிப்பதற்கு என்னென்ன முறைகளை கையாளுகிறார்கள்? யானைகள் மத்தியில் வாழும் சூழல் எவ்வாறு இருக்கிறது? என்பது உள்ளிட்ட சுமார் 50 கேள்விகளை அவர்கள் முன்வைத்து அதற்கான பதில்களும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் உள்பட அனைவரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது.
ஆய்வுகளின் முக்கியமான சாரங்களாக கீழே வருவன தொகுக்கப்பட்டிருக்கிறது:
• யானைகளால் கொல்லப்பட்டவர்களில் அநேகம்பேர் இரவுக்காவலுக்காக யானை வலசை செல்லும் பாதைகளிலுள்ள பட்டா நிலங்களில் விவசாயக்காவல் செய்வதற்காக அங்கே தங்கியிருக்கும் சமயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யானை பயத்தின் காரணமாக, தேவாரத்திற்கு அருகிலுள்ள பல கிராமங்களில், குறிப்பாக பிரம்புப்பட்டி, இரவுக்காவலுக்கு செல்வது முற்றிலும் நின்றுவிட்டது. பகலில் மட்டுமே விவசாயப்பணிகளை மேற்க்கொள்கிறார்கள்.
• அங்குள்ள பலருக்கு தமக்கு இங்கு வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை யானைகளுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். யானைகள் பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் இருப்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
• யானைகளால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தக்க உதவித்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறையோடு இருக்கிறார்கள்.
• யானைகளை விட பன்றிகளாலும், சிறுத்தைகளாலும் தான் தொல்லைகள் அதிகமுள்ளதாகக் கூறுகிறார்கள்.
• வனத்துறையிலிருந்து காடுகளில் விடப்படும் வனவிலங்குகள் குறித்த அச்சம் பரவலாகத்தென்படுகிறது.
• ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில், அம்மலையின் தேயிலைத்தோட்ட நிர்வாகமே யானைகள் ஏற்படுத்திய சேதங்களை சரிசெய்து கொடுத்து விடுவதால் அவர்கள் பெருங்கவலை கொள்வதில்லை. தாங்களே விவசாயம் செய்து கொள்ளும் மக்கள் மட்டுமே இது பற்றி கவலை தெரிவிக்கிறார்கள்.
• மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரிய, ஆசிரியைகள் அந்தந்த கிராமங்களில் தங்குவதில்லை அருகிலுள்ள நகரத்திலிருந்தே வருகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் வெளியூருக்குச் சென்றே கல்வி பயில்கிறார்கள்.
• வனம் சார்ந்த குற்றங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு வரை யானைகள் தந்தங்களுக்காக சுடப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் இப்போது மிகவும் குறைந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
• வனக்குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 26 முன்னாள் குற்றவாளிகளைக் கொண்ட “விடியல்” என்ற அமைப்பை கேரளா வனத்துறை கூடலூரில் இயக்கி வருகிறது. இவர்கள் சந்தன மரங்கள் வெட்டுவதையும், வனவிலங்குகளை வேட்டையாடுவதையும் கண்காணிக்கிறார்கள். கூடவே வெளிநாட்டுப் பயணிகளை மாட்டு வண்டிகளில் வைத்து விவசாய நிலங்களை சுற்றிக்காட்டுகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட முல்லை-பெரியாறு விவகாரத்தில் விடியல் அலுவலகத்தை முற்றாக சிதைத்திருக்கிறார்கள் கலவரக்காரர்கள்.
• யானைகளால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ஆண்களும் உண்டு ஆனால் குறைந்த சதவீதமே.
• யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்க அகழி அமைத்து அதில் வசிக்கிறார்கள் அல்லது பெரிய மரங்களில் மாடமோ அல்லது பரணோ அமைத்து அதில் தங்கிக்கொள்கிறார்கள்.
• படாங் மற்றும் வான வெடிகள் வெடித்து யானைகளை விரட்டுகிறார்கள். இவை எதுவும் இல்லாத பட்சத்தில் எண்ணை டின்களையும், கதவுகளையும், ஜன்னல்களையும் தட்டி ஓசை எழுப்பி விரட்டுகிறார்கள் அல்லது மலையாளத்திலோ, தமிழிலோ நாங்கள் எல்லாம் பிழைக்க வந்திருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்யாமல் போய்விடுங்கள் என்று இறைஞ்சுவதாகக் கூறுகிறார்கள். கூக்குரல்களை யானைகள் விரும்புவதில்லை, எரிச்சல் பட்டு தங்களை நோக்கி வர வாய்ப்புள்ளதாக பயப்படுகிறார்கள்.
• காவலுக்குள்ள நாய்கள் குரைத்து விரட்டி, சிலசமயம் காப்பதாகவும், பலசமயங்களில் குரைத்தே தங்கள் இடங்களைக் காட்டிக்கொடுத்து ஆபத்தை விளைவிப்பதாகவும் கூறுகிறார்கள்.
• பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக இருக்கிறோம் எப்படிங்க செல்வது என அங்கலாய்க்கிறார்கள்.
• ஐயப்ப சீசனையொட்டி கேரள வனப்பகுதிகளில் வெடி போடுவதால் கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் யானைகள் வரத்து அதிகமுள்ளதாய்க் கூறுகிறார்கள்.
• லோயர் காம்ப், அனுமந்தம்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் கோம்பை வரை கால்வாய்கள் உள்ளதாலும், இந்தக் கால்வாய்களே அரணாக இருப்பதாலும் யானை வரத்து இல்லை என்கிறார்கள் அருகிலிருக்கும் கிராமவாசிகள்.
Tuesday, January 31, 2012
எறும்புகள்

பூச்சிகள்
இப்புவி பசுமையாய் இருப்பதற்கும், தாவரங்கள் பூத்துக் குழுங்கி, காய்களையும், கனிகளையும் நமக்கு கொடையாய் கொடுப்பது என எல்லாமுமாய் நமக்குத்தருவது பூச்சிகள் என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் தாவரங்கள் இனவிருத்தி செய்ய உதவுவது பூச்சிகளே. இப்படி இப்புவியில் பூச்சிகளின் பங்கு மெச்சத்தக்கது. ஆனாலும், பூச்சிகளில் நன்மை செய்வன போல் தீமை செய்யும் பூச்சிகளும் உண்டு. பயிர்களை நாசம் செய்வதிலிருந்து, நோய் பரப்பும் கிருமிகளை பரப்புவது வரை அனைத்து மோசமான செயல்களை செய்வதும் பூச்சிகளே.
பூச்சிகள் எண்ணற்றவை. இப்புவியின் எண்ணற்ற உயிரினங்கள் பூச்சியினங்களே. பூச்சிகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது. பூச்சிகள் கணுக்காலிகள் என்ற தொகுதியை சார்ந்தது. ஆறு கால்கள் உள்ளவையெல்லாம் பூச்சிகளே. உண்மையில் எட்டுக்கால் பூச்சிகள் பூச்சிகளே அல்ல. உலகின் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு பூச்சியினங்களே. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பூச்சியினங்கள் உண்டு. இன்னும் கண்டுபிடிக்காத பூச்சியினங்கள் கண்டுபிடித்தவைகளைவிட ஒரு மடங்கு அதிகமே. பூச்சிகள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். சாக்கடையில் ஆரம்பித்து நல்ல தண்ணீர் வரையிலும், பனிப்பகுதியிளிருந்து வெப்பப்பகுதி வரையிலும் குகைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஓடைகள், நதிகள், புல்வெளிகள், காடுகள், பாலைவனங்கள், வயல்வெளிகள் என பார்க்கும் ஒவ்வொரு இடத்திலும் பூச்சிகள் நீக்கமற நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட பூச்சிகளின் வகைகள் பற்றி அறியலாம்.
எறும்பு
எறும்புகள் தனித்து வாழ்வதில்லை. ஒவ்வொரு எறும்பும் தனக்கிட்ட வேலையை செய்து முடிக்கும் திறன் கொண்டது. பெரும்பாலான எறும்புகள் பெண் வேலைக்கார எறும்புகளே. பெரிய குழிகளையும், எறும்புப்புற்றினையும் கட்டும் வல்லமை மிக்கவை அதோடு உணவு சேகரிப்பு, இளம் எறும்புகளுக்கு உணவு ஊட்டுவது, தனது கூட்டினை பாதுகாப்பது என பலவிதமான வேலைகளை செய்ய வல்லது. ராணுவ எறும்புகள், தச்சன் எறும்புகள், இலை வெட்டும் எறும்புகள் என பல ஆயிரக்கணக்கான சிற்றினங்கள் உண்டு.
தாவரங்களுக்கும், எறும்புகளுக்குமிடையே பரஸ்பர உறவு உண்டு. சில தாவரங்கள் இனிப்பான திரவங்களை சுரக்க வல்லது. அதை அருந்துவதற்கென்றே எறும்புகள் அத்தாவரம் சார்ந்திருக்கும். தனக்கு உணவு கொடுக்கும் தாவரங்கள் வளர்வதற்கு ஏதுவாக அருகில் வளரும் பிற தாவரங்களை முளையிலேயே வெட்டி எரிந்து வளர விடாமல் செய்துவிடும். அதேபோல சில பூச்சியினங்களுடன் சுமுக உறவைக்கொண்டிருக்கும். மாடு (cow bug) என பரவலாக அழைக்கப்படும் பூச்சிகளுடன் எரும்புகளுக்கான தொடர்பும் அவ்வாறே. மாடுகள் தாவங்களை உண்டு இனிப்பான திரவத்தை சுரக்கும். அவற்றை எறும்புகள் உண்ணும். மாறாக எதிரிகளிடமிருந்து மாடுகளை காப்பாற்றும். எறும்புகள் அநேகமாக எல்லா கரிமங்களையும் உண்ண வல்லது. இலைகள், பூஞ்சைகள், சிலந்திகள், புழுக்கள், அனைத்து வகையான பூச்சிகள், ஏன் மற்ற இனத்தை சார்ந்த எறும்புகள் என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.
Sunday, January 29, 2012
திருநங்கைத்தவளைகள்

சின்சினாட்டி பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் அற்றாஜின் என்ற பூச்சி மருந்துகளின் தாக்கத்தினால் ஆண் தவளைகள் பெண் தவளைகளாக மாறுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படி மாறிய தவளைகள் சாதாரண ஆண் தவளைகளோடு கலவி செய்து வீரியமுள்ள முட்டைகள் இடுகின்றன. ஆனால் ஆண் தவளைகள் அதனுடைய ஆண் தன்மையை இழந்து விடுவதாகவும், சுரப்பிகளின் அளவு குறைந்து விடுவதாகவும் இறுதியில் அர்த்தனாரித்தவளைகள் ஆகின்றன என்றும் கூறுகிறார்கள். மீன்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், விந்துகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாகவும், ஓனான் போன்ற ஊர்வனவற்றில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதே போன்ற முடிவுகளேகிடைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சற்று யோசித்துப்பாருங்கள்!
தொடர்ச்சியாக நாமும் பூச்சி மருந்துகளின் தாக்கத்திற்க்குள்ளாகும்போது, நம்மில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்?
திருநங்கைகளுக்கும், ஆண்களுக்கும் அல்லது பெண்களுக்கான மரபணுக்களில் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. AR gene என்றழைக்கப்படும் ஆண்ட்ரோஜென் ரிசப்டார் ஜீன் தான் காரணம் என்கிறார்கள். குரோமோசோம்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை ஆனால் மரபணுக்களில் தான் சில மாற்றங்கள். இன்று தவளையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் மனித குலத்திற்கும் நிகழலாம். சற்றே யோசிப்போம்!
Subscribe to:
Posts (Atom)




