Sunday, November 28, 2010


பஞ்சாரம்

நெய்த மூங்கிலுனில்
கீதம்
காற்றுக்குப்பதில்
குஞ்சுகள்

எனது மழலை

அதனதன் கணங்களின்
பதிப்பில் எழுதியது
அர்த்தம் காண
எனக்கே முடிவதில்லை
சிலசமயம் பிரமிப்பாகவும்
பிறிதொரு சமயம்
சலிப்பாகவும்
இருந்தாலும்..
என் வரிகள் படிக்க
எனக்கெப்போதும் சுகமே!

தலைப்புகள் மட்டும்

நிலா ஆய்ந்த நேரம்
மீன்கள் உலா வரும் விடுதி
சேர்மானச்சிக்கல்கள்
புறா இறகு
புகுந்த ஆமை
புனர் பூசம்
நட்சத்திர குழுமம்
நனவான கொலை
நசிந்த கூகை
நடு நிலா என
தலைப்புகள் கிட்டிய அளவு
கவிதைக்குச் சொற்கள்
கிட்டவில்லை
ஆனால் முற்றும் துறக்கவில்லை
முயற்ச்சிகளை

No comments: